×

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் மகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: 2வது கணவருடன், தாய் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் எம்ஜிஆர்புரம் திருப்பதிக்குடை ரோட்டை சேர்ந்தவர் துர்காதேவி(33). அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் திருவல்லிக்கேணியை சேர்ந்த பழனி என்பவருக்கும் 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு ஆகாஷ் (13), தீபக் (11) என இரு மகன்கள் உள்ளனர். எனக்கும், கணவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறோம். எங்களது விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனக்கு சிறு வயது இருக்கும்போதே எனது அம்மா அமுதபிரியா(51), எனது அப்பா ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் அவர் தி.நகர், கண்ணம்மாபேட்டை, புதுத்தெருவை சேர்ந்த ராஜேஷ் (52) என்பவருடன் 25 ஆண்டாக குடும்பம் நடத்தி வருகிறார். ராஜேஷ் கடந்த ஒரு மாதமாக என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்போது, அவர் என்னிடம் நீ தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் வந்து விடு. உனது அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எனவே, உன்னை நான் வைத்து குடும்பம் நடத்துகிறேன் என்று கூறுகிறார். மேலும், ராஜேஷ், எனது அம்மா சேர்ந்து சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான பதிவுகளை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். என்று கூறியிருந்தார். இதனையடுத்து, போலீசார் ராஜேஷ், அமுதபிரியாவை நேற்று  கைது செய்தனர்….

The post ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் மகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: 2வது கணவருடன், தாய் கைது appeared first on Dinakaran.

Tags : Ambathur ,Durgadevi ,Ambanthur Mgrpuram Tirupathicududu Road ,Ambanthur Vocation Station ,Dinakaran ,
× RELATED ஸ்ரீ துர்காதேவி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா